ஞாயிறு, 31 மார்ச், 2013



என் வாழ்வில் பல  மாற்றங்களைத் தந்தவர்கள்  நீங்கள்...
என் சுக துக்கத்தில்  மறவாமல் பங்குக்கொள்பவர்கள் நீங்கள்...
நான் மறைந்தாலும் ஒருபோதும் மறக்காது எந்தன் மனம்...
உங்களை ஒருபோதும் இழக்காது...

எனது மனவேதனைகளைச் சலிக்காமல் சொல்லும் பொழுது...
சிரித்துக்கொண்டே அன்பாய் அதை நீங்கள் கேட்பது ஒரு அழகு...
என் இதயத்திற்கும் சொல்லாத ரகசியங்களைப் பகிரும் போதும்...
உங்கள் நிழலுக்கும் தெரியாமல் காப்பது பேரழகு...

இப்படியாய் ஒர் அற்புத நட்பு கிடைத்தது...
சத்தியமாய் என் பெற்றோரின் புன்னியத்தினால்தான்...
மாதா பிதா குரு தெய்வம்  இவர்களை அடுத்து...
எனக்கு என்றுமே என் நண்பர்கள் தான்...


எப்படி சொல்வதென்று தெரியவில்லை...
எப்படியும் இதை சொல்லியே ஆகவேண்டும்...
நன்றி... மிக்க நன்றி ...
என் அருகினில் நீங்கள் எப்போதும் துணை இருப்பதற்கு.
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: