செவ்வாய், 8 ஏப்ரல், 2014

உன்னைக் கண்ட முதல் நாளன்றே
கண்டறிந்தேன் இது காதலென்று
என் முருகன் என் வேண்டுதலை கேட்டு
உன்னை எனக்கென படைதானே ...

உன் மனதை எனக்கு பரிசளித்து
உன் எண்ணத்தில் என்னை குடிவைதாய்
உன் மேல் அளவில்லா ஆசையை வளரவைது
உன் ஒருவனை மட்டுமே பார்க்கச் செய்தாய்

தேனமுதாய் சுவையுடும் உன் குரலினால்
பல அமுத ராகம் நீ பாடி
உன் மடியில் என்னைச் சாய்த்து..
தாயின் தாலாடினை எனக்கு  நினைவுடினாய்...

அனுதினமும் என்னை புன்னகைக்க செய்தாய் நீ
என்னுள் பல மாற்றங்கள் தந்தாய் நீ
நானாய் நான் இருந்தும் ... உன்னுள் நுழையாமலே..
நீயாய் ஆனேனே ..  என்னை முழுவதும் தொலைத்தேனே...

என்ன மாயம் செய்தாயோ...
யாரும் வெல்ல முடிய என் மனதை நீ வென்றாய்
வாழ்நாள் முழுவதும் உன் கை கோர்த்து நடக்க என் உள்ளம் ஏங்குதே...
ஏழேழு பிறப்பிலும் உன்னோடு நான் வாழ என் உயிரும் விரும்புதே...

<கவிதைப்பெண்> 

வெள்ளி, 14 மார்ச், 2014

ஊரெல்லாம் உறங்கும் இந்த நடுநிசி வேளையிலே
நிலா மாமா காவல்காரனாக...
காதல் ஊஞ்சலில் தூரப்பயணம் செய்யும் நெஞ்சமே
என் சின்னச்சிறு நெஞ்சமே...

சில்லென வீசும் இளந்தென்றல் என்னைத் தொட்டு செல்கையில்
என் கைகள் இரண்டும் என்னை இறுக்கி அணைக்குதே...
மோக அலைகள் என் உணர்வுகளை சீண்டிப் பார்கையில்
கொஞ்சமாய் என் பெண்மையும் என்னை கெஞ்சுதே மெல்ல கொஞ்சுதே..

உன் விரல்களின் தீண்டலுக்கு என் இமைகளும் ஏங்கும் இந்நேரம்
தித்திக்கும் இதழ் பானம் பருகுவது எந்நேரம்
காதல் ஆசைகள் என் உணர்வினைக் கட்டி இழுக்குதே..
மோக கனவுகள் என் உணர்ச்சியை தட்டி எழுப்புதே..

தென்றலின் பாட்டுக்கு தலையசைக்கும் தென்னை கீற்றுகளே
என் மன்னவன் மார்பினில் நான் தலைச் சாய்வதெப்போது
கண்களை சிமிட்டி வண்ணமாய் ஜொலிக்கும் நட்சத்திங்க்களே
என் மடி சாய்ந்து என்னவன் உங்களை ரசிப்பதெப்பொது

<கவிதைப்பெண்>