ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

நிலவினைக்  கண்ட கண்ணால் சூரியனைக்  காண வாய்ப்பளித்ததற்கு 
நன்றிகள்.... 
நண்பர்களாய் இருந்த  உறவுகள்...  சொந்தங்களாய் மாறியதற்கு 
நன்றிகள் ....
இரவினிலும் பகலினிலும் காணும் கனவுகள் நினைவானதற்கு 
நன்றிகள்.... 
ஆசைகளாய்  இருந்த அனைத்தும் காதலாய் மாறியதற்கு 
நன்றிகள்.... 
<கவிதைப்பெண்>

வியாழன், 18 ஏப்ரல், 2013

எப்போதும் மகிழ்சியாக சிரித்துக்கொண்டே இருங்கள் 
சிரிபதற்கு காரணங்கள் இருந்தால் மட்டுமே சிரிக்க வேண்டு என்பதில்லை 
நாம் சிரிப்பே ஒரு காரணமாகி மற்றவரை சிரிக்க வைக்கும்  
<கவிதைப்பெண்>



புதன், 17 ஏப்ரல், 2013

படுக்கை எழும் என்னை
மெதுவாய் மீண்டும் கட்டி அணைக்கிறது...
ஜன்னலுக்கு வெளியிலே
சோவென்று பூமியை நனைக்கும் மழை அழகன்...
கண்ணை சிமிட்டும் கடிகாரப்  பையன்
வாயை பிளந்து அலற தொடங்கிவிட்டான்...
கட்டியனைத்த படுக்கையின் தலையில் செல்லமாய் ஒரு தட்டல்  ...
வாயை பிளந்து அலறும் கடிக்காரப்  பையனின் தலையில் மறு தட்டல்..
மழையழகனின்  சூழ்ச்சி என் வீடு குளியல் அறையில் ஒரே குளிர்ச்சி..
நீண்ட பயணத்தில் மழை அழகனை ரசித்துக்கொண்டே
வாகனத்தை செலுத்தி பாடல் கேட்கும் தருணங்கள்..
வாழ்கையின் ஒவ்வொரு நொடிகளையும் இதமாய் ரசிக்க தூண்டுகிறதே 
மனம் சாலைகளில் செல்லும் ஒவ்வொன்றையும் நேசிக்க ஏங்குகிறதே
அட  அட அட  என்ன வாழ்க்கையாட ...
இது போதும் எனக்கு இது போதுமே.. வேறென்ன வேணும் இது போதுமே..
<கவிதைப்பெண்>


திங்கள், 15 ஏப்ரல், 2013

தமிழை  மறப்பவன்  தன்   தாயை  மறுப்பவனை  விட  கொடியவன் 
தமிழ்  நமது  முச்சிக்காற்று...  சுவாசங்கள்  நின்றாலும் 
வீசும்  தென்றல்  அது  நிற்காது ...
தமிழ்  முச்சிக்காற்றாய்  மிதந்துக்கொண்டுதான்  இருக்கும்  இப்புவியில் 

தமிழ்  பேச  வாய்கூத்  தமிழர்கள்  தமிழ்ப்பேசும்  வரை ...
< கவிதைப்பெண் >