வியாழன், 30 மே, 2013

வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணங்களில் கிழே விழுந்தாலும்
முயற்சித்து எழுந்து நிற்கும் ஒவ்வொரு நொடிகளும்.. 
நீ வாழ பிறந்தவன் என்பதை உனக்கு ஞாபகப்படுத்தும் தருணங்கள்.. 
இதுவே வாழ்க்கை பாடத்தினைக்  கற்றுக்கொள்ள சிறந்த வழிகள் 
<கவிதைப்பெண்> 

சனி, 25 மே, 2013

நாம் சந்தித்த நாட்கள் ...
பசுமையாய் நினைவலைகளில் நீந்துகின்றது...
வெட்கத்தின் பிடியினில் இருவரும்..
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள...
யார் முதலில் பேசுவதென்ற தயக்கத்தில்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றோம்....

நாள்தோறும் பேசிப் பழகினோம் ....
பின்னர் அதுவே பழக்கமாய் பழகிப்போனது ...
நமது உரையாடலும் வளர தொடங்கியது...

வார்த்தைகள் கவிதையாய் மொழிந்த தருணங்கள்..
ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் கொண்டோம்...
இருக்கமான உறவினில் இணைந்து விட்டோம்...
பிடித்தமான மனதினை பிடிதவற்கு பரிசளிதப்பின்....
<கவிதைப்பெண்> 

ஞாயிறு, 12 மே, 2013

கண்டதும் காதல்.....
அதில் எனக்கு நம்பிக்கை உண்டு
நானும் வசப்பட்டுள்ளேன் அதன் பிடியினில்....
கண்திறந்த மறுகணமே காதல் கொண்டேன்
என் அன்னையின் மேல் .. காதல் கொண்டேன்
அன்று தொடங்கி இன்று வரை...
அவர் காதலுக்கு நான் அடிமை...
இனி என்றும் என்றென்றும்...
உங்கள் பாசம் எனக்கு வேண்டும் அம்மா...
<கவிதைப்பெண்>