புதன், 17 ஏப்ரல், 2013

படுக்கை எழும் என்னை
மெதுவாய் மீண்டும் கட்டி அணைக்கிறது...
ஜன்னலுக்கு வெளியிலே
சோவென்று பூமியை நனைக்கும் மழை அழகன்...
கண்ணை சிமிட்டும் கடிகாரப்  பையன்
வாயை பிளந்து அலற தொடங்கிவிட்டான்...
கட்டியனைத்த படுக்கையின் தலையில் செல்லமாய் ஒரு தட்டல்  ...
வாயை பிளந்து அலறும் கடிக்காரப்  பையனின் தலையில் மறு தட்டல்..
மழையழகனின்  சூழ்ச்சி என் வீடு குளியல் அறையில் ஒரே குளிர்ச்சி..
நீண்ட பயணத்தில் மழை அழகனை ரசித்துக்கொண்டே
வாகனத்தை செலுத்தி பாடல் கேட்கும் தருணங்கள்..
வாழ்கையின் ஒவ்வொரு நொடிகளையும் இதமாய் ரசிக்க தூண்டுகிறதே 
மனம் சாலைகளில் செல்லும் ஒவ்வொன்றையும் நேசிக்க ஏங்குகிறதே
அட  அட அட  என்ன வாழ்க்கையாட ...
இது போதும் எனக்கு இது போதுமே.. வேறென்ன வேணும் இது போதுமே..
<கவிதைப்பெண்>


கருத்துகள் இல்லை: