வெள்ளி, 6 டிசம்பர், 2013

உம்மை போல் ஒரு தலைவன் இவ்வுலகத்திற்கு  இனி ஏழேழு ஜென்மத்திற்கும் கிடைக்கபோவதில்லை..
சரித்திரம் வியந்து பார்க்கும் சரித்திர புருஷனே..
தென் ஆபிரிக்காவின் மூத்த குடிமகனே...
கறுப்பின மக்களை நிறவெரிப்பிடித்த அரக்கர்கள் பந்தாடியபோது
சீறிப்ப பாந்து அவர்களின் கொட்டத்தை அடக்கியவனே
தென் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடுதலை பரிசளித்த மன்னவனே

உலக சமாதானத்துக்காக போராடிய உமக்கு
இந்திய நேரு சமாதான விருந்தினைக் கொடுத்தது
உன் தலைமைத்துவத்தை பார்த்து மீண்டும் அதே இந்திய
உமக்கு பாரத ரத்னா விருந்தை வழங்கியது
உலக அமைதிக்காக நீர் செய்த தியாகங்களை கண்டு
உமக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது 
அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருந்தினையும் கைப்பற்றினாயே

இப்படியாய் பல விருந்துகள் நீர் பெற்றிருந்தாலும்
உமக்கென நீர் என்றும் எதிர்பார்க்காத  ஒரு விருந்து
மக்கள் மனதில் நீர் இன்னமும் வாழ விதிவிளக்காய் இருப்பது
என்றுமே அழியாத ஓர் இடம் அவர்களின் மனதினில்
உமக்கென மட்டுமே

<கவிதைப்பெண்>





கருத்துகள் இல்லை: