சனி, 25 மே, 2013

நாம் சந்தித்த நாட்கள் ...
பசுமையாய் நினைவலைகளில் நீந்துகின்றது...
வெட்கத்தின் பிடியினில் இருவரும்..
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள...
யார் முதலில் பேசுவதென்ற தயக்கத்தில்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றோம்....

நாள்தோறும் பேசிப் பழகினோம் ....
பின்னர் அதுவே பழக்கமாய் பழகிப்போனது ...
நமது உரையாடலும் வளர தொடங்கியது...

வார்த்தைகள் கவிதையாய் மொழிந்த தருணங்கள்..
ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் கொண்டோம்...
இருக்கமான உறவினில் இணைந்து விட்டோம்...
பிடித்தமான மனதினை பிடிதவற்கு பரிசளிதப்பின்....
<கவிதைப்பெண்> 

கருத்துகள் இல்லை: