செவ்வாய், 8 ஏப்ரல், 2014

உன்னைக் கண்ட முதல் நாளன்றே
கண்டறிந்தேன் இது காதலென்று
என் முருகன் என் வேண்டுதலை கேட்டு
உன்னை எனக்கென படைதானே ...

உன் மனதை எனக்கு பரிசளித்து
உன் எண்ணத்தில் என்னை குடிவைதாய்
உன் மேல் அளவில்லா ஆசையை வளரவைது
உன் ஒருவனை மட்டுமே பார்க்கச் செய்தாய்

தேனமுதாய் சுவையுடும் உன் குரலினால்
பல அமுத ராகம் நீ பாடி
உன் மடியில் என்னைச் சாய்த்து..
தாயின் தாலாடினை எனக்கு  நினைவுடினாய்...

அனுதினமும் என்னை புன்னகைக்க செய்தாய் நீ
என்னுள் பல மாற்றங்கள் தந்தாய் நீ
நானாய் நான் இருந்தும் ... உன்னுள் நுழையாமலே..
நீயாய் ஆனேனே ..  என்னை முழுவதும் தொலைத்தேனே...

என்ன மாயம் செய்தாயோ...
யாரும் வெல்ல முடிய என் மனதை நீ வென்றாய்
வாழ்நாள் முழுவதும் உன் கை கோர்த்து நடக்க என் உள்ளம் ஏங்குதே...
ஏழேழு பிறப்பிலும் உன்னோடு நான் வாழ என் உயிரும் விரும்புதே...

<கவிதைப்பெண்> 

கருத்துகள் இல்லை: