ஞாயிறு, 31 மார்ச், 2013



என் வாழ்வில் பல  மாற்றங்களைத் தந்தவர்கள்  நீங்கள்...
என் சுக துக்கத்தில்  மறவாமல் பங்குக்கொள்பவர்கள் நீங்கள்...
நான் மறைந்தாலும் ஒருபோதும் மறக்காது எந்தன் மனம்...
உங்களை ஒருபோதும் இழக்காது...

எனது மனவேதனைகளைச் சலிக்காமல் சொல்லும் பொழுது...
சிரித்துக்கொண்டே அன்பாய் அதை நீங்கள் கேட்பது ஒரு அழகு...
என் இதயத்திற்கும் சொல்லாத ரகசியங்களைப் பகிரும் போதும்...
உங்கள் நிழலுக்கும் தெரியாமல் காப்பது பேரழகு...

இப்படியாய் ஒர் அற்புத நட்பு கிடைத்தது...
சத்தியமாய் என் பெற்றோரின் புன்னியத்தினால்தான்...
மாதா பிதா குரு தெய்வம்  இவர்களை அடுத்து...
எனக்கு என்றுமே என் நண்பர்கள் தான்...


எப்படி சொல்வதென்று தெரியவில்லை...
எப்படியும் இதை சொல்லியே ஆகவேண்டும்...
நன்றி... மிக்க நன்றி ...
என் அருகினில் நீங்கள் எப்போதும் துணை இருப்பதற்கு.
<கவிதைப்பெண்>

செவ்வாய், 19 மார்ச், 2013

வாழ்க்கையில் யாரையும் குறைச்சொல்லாதே...
நல்ல மனிதர்கள் நமக்கு சந்தோசத்தினைத்  தருகின்றனர்... 
தீய உள்ளம் கொண்ட சில மோசமான மனிதர்கள் நமக்கு 
அனுபவத்தினையும் நல்ல ஒரு பாடத்தினையும் கற்றுக் கொடுக்கின்றனர்... 
வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு நல்ல நினைவுகளை நம் வாழ்க்கை புத்தகத்தில் பதித்தவர்கள் என்றும் நமது ஞாபகத்தில் வசிக்கின்றனர்...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 17 மார்ச், 2013

என்னென்னெ தெரியல... யாருகிட்டேயும் இப்படி தோனதில்ல
எத்தனையோ பேரு என்னை  பிடிச்சிருக்குனே சொல்லியும்..
எதையும் என் மனசு கேட்டு  சலனப்படல
உன் வார்த்தைகள்  என்னை தடுமாற வைத்தது
உன்னை  மெல்ல நான்  ரசிக்க ஆரமித்தேன்
உன் மேலே நான் வெச்ச ஆசை என்னை சோதிக்க
சொல்லலாம்மென்று நான் வந்த நொடியிலே கண்ணாடிப்போல
ஒரே வார்த்தையிலே என் உசுர  சில்லு சில்லா உடைத்துவிட்டாய்
ஆசை அது ஆத்தோடு போகட்டும்...
நல்ல வேலை காதல் கடல் பெருகுவதற்குள்ளே .. அணைய அடிசிடாங்க....
<கவிதைப்பெண்>


செவ்வாய், 12 மார்ச், 2013

சிலவேளைகளில் சிலர்  செய்த தவறுகளை மன்னித்து மறந்து அவர்களை நாம் ஏற்றுக்கொள்வது இயல்பான  ஒன்றுதான்..
ஆனால்.. மீண்டும் முன்பு பழகியதைப் போல அதே நெருக்கத்துடனும் முன்பு அந்த நபரின் மேல் வாய்த்த  நம்பிக்கையினையும் பழக மனம் சங்கடப்படும்..
மன்னித்து மறுமுறை வாய்ப்பளிக்கும் எண்ணம் மனதிற்கு வந்தாலும்.. சிந்தித்து பார்த்து சரியா தவறா என முடிவெடுக்க மதி தயங்குவதில்லை...
<கவிதைப்பெண்> 

ஞாயிறு, 10 மார்ச், 2013

கேட்டதும் கவிதை சொல்லும் அளவிற்கு நான் மா பெரும் கவிதைமேதையல்ல... 
என் நெஞ்சத்தை தென்றல் வந்து தீண்டும் நேரம்...
என்னை அறியாமல் என்னுள் நிகழும் பல மாற்றம்...
அடுத்த நொடியில் கட்டளையிடும் என் கரங்களுக்கு ஒரு கவிதை எழுதடி என்று..
அதுதான் என் கவிகளின் பிறப்பிடம்... 
<கவிதைப்பெண்> 
சிலர் எப்போதும் இதை இப்படி செய்யவேண்டும் ... அதை அப்படி செய்யவேண்டும்.. இதை இவர் இப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்.. அதனை அவர் அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வதிலும் பேச்சினால்  செய்வதிலும் திறமைசாலிகள்...
ஏன் அதை நாம செய்துக்காட்டினால் என்ன என்று நினைபவர்கள் நம்மில் மிகவும் குறைவு .. உண்மையை சொல்கிறேன் .. என் ஆள் மனதினுள்ளும் இதுப்போன்ற எண்ணங்கள் எழுவது வழக்கம்..
சிலபல தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதைவிகளையும்.. உரிமைகளையும் .. மறைந்து மறைத்து செய்யும் அளவிற்கு நம்மில் சிலர் வாழ்க்கை அமைந்து விட்டது...
முருகன் நமக்கென அமைத்துக்கொடுத்த பாதை இதுவெனில் அந்த பாதையில் தடம் புரளாமல் செல்லவேண்டியது நம் பொறுப்பு ...
அதே நேரத்தில் செல்லும் வழிகளில் கண்களில் ஏதேனும் கரும்புள்ளிகள் தென்பட்டால் அதை வெண்மையாக்க நம்மாலான உதைவியினை செய்தல் சிறப்பானது...
<கவிதைப்பெண்>